முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிலக்கடலைப் பால் - Groundnut Milk - Healthy Milk

நிலக்கடலைப் பால் - Groundnut Milk - Healthy Milk  முளைத்த நல்ல நிலக்கடலை பருப்பு 300 கிராம்  நனையப் போட்ட முந்திரி பருப்பு 5, ஏலக்காய் 1 சேர்ந்து மிக்ஸியில் போட்டு பால் எடுக்கவும். பாலை சுடவைக்க கூடாது சூடான காபி,டீயில் சாப்பிடுவதற்கு முன் இந்த பாலை ஊற்றிக்கொள்ளலாம்    இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Healthy milk taken from Groundnut which is used to replace ordinary milk.It is more healthy and stronger.

எள் வேர்க்கடலை உருண்டை

எள் வேர்க்கடலை உருண்டை இளைத்தவனுக்கு எள் உணவாக கொடுக்கும் போது எடை கூடும்.‌ மேலும் பல சத்துக்கள் நிறைந்த எள்ளையும் வேர்கடலையும் வைத்து எளிதாக செய்யும் ஒரு உருண்டை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும். மேலும் சனிக்கிழமைகளில்  சனிக்கிரகத்தினால் ஏற்படும் பாதிப்பைகளை குறைக்க எள்ளினால் உணவை சனிக்கிழமை சேர்த்து கொள்வது நல்லது. தேவையானவை கறுப்பு எள் 1 கப் பச்சை வேர்க்கடலை 1 கப் வெல்லத்தூள் 2 கப் ஏலக்காய்த்தூள் சிறிதளவு செய்முறை கறுப்பு எள்ளை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவும். எள்ளைக் களைந்து, ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி,வெயிலில் உலரவிடவும்.லேசாக ஈரம் இருக்கும்போது வெறும் வாணலியில் சிறிதுசிறிதாக போட்டு வெடிக்கும்படி வறுக்கவும். ஆறிய பின் எள், வேர்க்கடலை, வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நார்ச்சத்து தாவர உணவிலிருந்தே கிடைக்கிறது. இது குடல் இயக்கங்களை சுலபமாக்குவதோடு ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. உணவு உண்ட நிறைவுத் தன்மை கொடுத்து உடல் எடையை குறைய உதவுகிறது. இதய நோய்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பை தவிர்க்கின்றது இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை கரையும் மற்றும் கரையா நார்ச்சத்து ஆகும். சைவ உணவில் இரண்டு வகை நார்ச்சத்துக்களும் உள்ளன. மாமிச உணவுகளான ஆட்டு இறைச்சி மீன் முட்டை மற்றும் பால் பொருட்களில் நார்ச்சத்து கிடையாது. கரையும் நார்ச்சத்து நீரில் கரைந்து களிம்பு போன்ற அமைப்பை உருவாக்கி செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. வயிறு காலியாவது தாமதமாவதால் வயிறு நிறைந்தது போன்ற உணர்வித்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. மலத்தை மிருதுவாக்கி மலம் எளிதில் வெளியேற உதவுவதால் நல்ல பாக்டீரியாக்கள் பெருகி, ஆரோக்கியமான பெருங்குடல் அமைய உதவுகிறது. வயிறு காலியாவது தாமதப் படுவதால் இன்சுலின் உணர்திறனில் சாதகமான விளைவை ஏற்படுத்தி ரத்த சர்க்கரையை கட்டுப்...

அரோமாதெரபி குளியல் உப்புகள்

ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த இந்த உப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சக்கரங்களை சமப்படுத்தவும் உட்செலுத்தப்பட்ட அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மூலம் உடலையும் மனதையும் தளர்த்தும். பாத் உப்புகள் கலந்த தண்ணீரில் மூழ்கி உங்கள் மன அழுத்தத்தை நீக்குங்கள். உங்கள் குளியல் நீரில் இந்த குளியல் உப்புகளைச் சேர்ப்பது மனதைத் தளர்த்தி, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது நச்சுத்தன்மையற்ற, பயமுறுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை, விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை.

வயிற்றுப்போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் வைத்து மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...

பீர்க்கங்காய் பயன்கள்

பீர்க்கங்காய் தோலை  துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.பீர்க்கங்காய் துவையல் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் புற்றுநோய் வராமல் தடுக...

துளசி மருத்துவ குணங்கள்

துளசி இலை கதிர்களுடன் வாட்டிப் பிழிந்து இரண்டு துளி வீதம் காதில்விட காது மந்தம் தீரும் துளசி பூங்கொத்து, திப்பிலி, வசம்பு பொடி செய்து சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் தீரும் துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்கவைத்து பற்றிட விலா வலி தீரும் துளசி விதை அரசவிதை அரைத்து காய வைத்து சாப்பிட கணச்சூடு தீரும்

ஓமவல்லி இலை

ஓமவல்லி இலைக் காம்பு  சளிக் காய்ச்சலுக்கு ஓமவல்லி இலைக் காம்புகளை குடி நீராக்கி கொடுக்க குணமாகும் 

பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி  கீரை கண்பார்வைக்கு நல்லது சருமத்துக்கு நல்லது மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிபடுத்தும் ஆற்றல் உடையது ரத்தத்தை சுத்திகரிக்கும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் வாய் துர்நாற்றத்தை நீக்கும் இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு மட்டும் 

கம்பு உடலுக்கு தரும் நன்மைகள்

கம்பு                 இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர். இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இந்த உஷ்ணத்தை கம்பு போக்குகிறது. மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து...

சிறு நீர், சிறு நீரகம் மற்றும் நீர் கடுப்பு பிரச்சனைகளுக்கு

நீர்கடுப்பு தீர அன்னாசி பழச்சாறு சாப்பிடவும் சிறுநீர் பாதை ரணம் தீர சந்தனக் கட்டையை பாலில் உரசி சாப்பிட்டு வரலாம் நீர் எரிச்சல் தீர கல்யாண முருங்கை இலைச்சாறு ஒரு  கரண்டி மோரில் கலந்து குடிக்கலாம் நீர்சுருக்கு சரியாக பனங்கற்கண்டு பசும்பால் சாப்பிட்டு வரலாம் சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம் சிறுநீரக வியாதி தீர சுரைக்காய் சாறு எலுமிச்சம்பழம் சாறு அருந்தலாம் நீரழிவு தீர நன்னாரி வேர் ஊறவைத்து வடிகட்டி குடிக்கலாம் சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் குணமாக அத்திபால் வெண்ணை கலந்து சாப்பிடவும் மிகையான சிறுநீர் கழித்தல் தீர மருதோன்றி இலை பத்து கிராம் பாலில் அரைத்து சாப்பிடவும்    சிறுநீரகம் பலமாக ரோஜாபூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் சாப்பிடவும்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த - வாழைப்பூ

வாழைப்பூவின் மருத்துவ குணம்      வாழைப்பூவைச் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர ...

மூளைப் பலம் பெற

மூளைகோளாறு குணமாக வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான பல பிணிகள் குணமாகும் மூளைப் பலம் பெற வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில் சாப்பிடவும் மூளைப் பலம் பெற பீர்கங்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வரலாம் மூளைச் சுறுப்பாக வல்லாரை சாறில் ஊற வைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடலாம்

கல்லடைப்பு நீங்க

கல்லடைப்பு நீங்க யானைநெருஞ்சி பொடி அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட குணமாகும் கல்லடைப்பு நீங்க மாவிலங்கபட்டை கசாயம் காலை மாலை சாப்பிடவும் கல்லடைப்பு நீங்க முதிர்ந்த மருதாணி வேர் பட்டை கசாயம் செய்து சாப்பிடவும்

பெருமாள் கோயில் தீர்த்தம் - பல்வேறு நோய்களுக்கான மருந்து

பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி புனித தீர்த்தம் நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து 1 – ஏலம், 2 – இலவங்கம், 3 – வால்மிளகு, 4 – ஜாதிப்பத்திரி, 5 – பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும். முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தை யும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பதனம் செய்து பூஜை அறையில் வைக்க லாம். இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து் ,. வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல்,...

வயிற்றுப் பூச்சி

வயிற்றுப் பூச்சிகளிடமிருந்து  விடுதலை பெற  வேப்பங்கொழுந்து ஈர்க்கு, கடுக்காய், பிரண்டை சாறு விட்டு அரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுக்க குடல் பூச்சி வெளியேறும். நாக்கு பூச்சி நீங்க குப்பை மேனி வேர் பொடி கஷாயம் செய்து குடிக்கலாம்.    குடற்பூச்சிகள் அகல கல்யாண முருங்கை இலைச் சாறு 10 துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு குடுக்கலாம்.   திமிர்பூச்சி அழிய சுண்டக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும். குடல் புழுக்கள் அழிய மாதுளம்பழம் சாப்பிடலாம்  வயிற்று பூச்சி அழிய வெங்காய பூவை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வரலாம். வயிற்று பூச்சிகள் ஒழிய தினமும் அன்னாசி பழம் சாப்பிட வேண்டும் . நுண் புழுக்கள் அழிய மணலிக்கீரையை உண்டு வரலாம் 

இயற்கை முறையில் கொசு மருந்து

இயற்கை கொசு மருந்து தயாரிக்கும் முறை‌ : தேவையான பொருட்கள் வேப்பம் பூ வேப்ப இலை பச்சை கற்புரம் - சிறிதளவு ஒரு மிக்ஸி ஜாரில் வேப்பம் பூ மற்றும் வேப்பிலையை சுத்தம் செய்து இடவும். அதனுடன் தேவையான நீர் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்பு கீழே இறக்கி நன்றாக ஆறவிடவும். பின்னர் பச்சைக் கற்பூரம் சிறிதளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் இட்டு பொடிக்கவும். ஆறவைத்த சாறில் பொடித்த பச்சைக்கற்புரத்தை கலந்து வைத்து தீர்ந்து போன ஒரு குட்நைட் லிக்விட் பாட்டிலில் நிரப்பி குட்நைட் மெஷினில் மாட்டி ஸ்விட்ச் ஆன் செய்யவும். இயற்கை முறையில் இப்போது கொசுவை விரட்ட ரெடியாகி விட்டது. நீங்களும் முயற்சி செய்து பார்த்துவிட்டு கருத்துக்களை பதிவு செய்யவும்.

மஞ்சள் ஒரு மாமருந்து

மஞ்சள் ஒரு  மாமருந்து        மஞ்சள் ஒரு அற்புதானமான மருந்து பொருள் என்பது அறியாமலேயே நாம் தினமும் மஞ்சளை சமையலில் உபயோகித்து வருகிறோம். அதன் பயன்களை இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்தால் உணவே மருந்து எனும் உண்மையை `விளங்கி கொள்ள முடியும்.     எனக்கு தெரிந்த ஒரு சிலர் ஒரு வேளைக்கு 20 அல்லது 30 மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. முப்பது மாத்திரைகளை ஒருவர் சாப்பிடும் போது உணவு அருந்த அங்கே வயிற்றில் இடமேது.மேலும் மருந்தால் வரும் பக்க விளைவுகளையும் நாம்  சந்திக்க வேண்டி இருக்கிறது .       ஆனால் வீட்டுற்குள்ளேயே ஒரு எளிய உணவு பொருளான மஞ்சள் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற மருத்துக்களை உட்க்கொண்டு உடல் வீணாவதை தவிர்க்க முடிகிறது .     மஞ்சளில் குர்குமின் எனும் ஒரு வேதி பொருள் உள்ளது அது பல்வேறு நோய்களை குணமாக்க உதவுகிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கபட்டு  இருக்கிறது.            மேலும் மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த கூட...

வெட்டி வேரின் மருத்துவ பயன்கள் -2

              முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.               வெட்டிவேரில் இருந்து நறுமண எண்ணையும்,மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.  இந்த வெட்டி வேர் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாகின்றது.                      வெட்டி வேர் மருந்து பொருட்களிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும். கூந்தல் தைலம்,சோப்பு, வாசனை திரவியங்கள் போன்றவைகளும் வெட்டிவேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.        கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேரை தட்டி,வெட்டி வேர் விசிறி போன்றவைகளும் தயாரித்து பயன்படுத்தப்படுக...

காபி மற்றும் டீ குடிப்பது நல்ல பழக்கமா ?

அவருக்கு பீடி, சிகரெட், பாக்கு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்ல அவருக்கு போய் இந்த வியாதி எப்படி வந்ததுன்னு தெரியல இப்படி யாராவது சொல்லி நம்ம பார்த்துருப்போம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமா  இருக்க என்ன என்ன நல்ல பழக்கம் இருக்குனு நாம பார்க்கிறதில்ல 1. சிலர் ரொம்ப நல்ல பழக்கம் வச்சிருப்பாங்க ஆனால் யாருக்காவது உதவி செய்யணும்னு முடிவெடுத்துட்டா சாப்பாடு , தூக்கம் மறந்து ஓடி ஓடி உழைப்பாங்க ... 2.இன்னும் சிலர் ஒரு காபி இல்லது டீ குடிச்சிட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க... 3.ஒரு சிலர் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல ஆனா காலைல எந்திரிச்சதும் வெறும் வயிற்றில் காபி குடிச்சாதான் எனக்கு நாளே போகும்னு சொல்லுவாங்க இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க கூட இந்த காபிக்கு அடிமையாகி தேவை இல்லாத நேரத்தில் பருகி ஜீரண உறுப்பை கெடுப்பதுடன் நாளடைவில் சரியான நேரத்தில் பசி எடுக்காமல் சரியான முறையில் உண்ணாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்வதுடன் கெடுத்துக்கொள்கிறார்கள். உடலில் ஏற்படும் அமிலத்தன்மை கேன்சர் போன்ற கி...

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஆசைப் படுகிறோம். அது போல நாம் யார் மீது மிகவும் அன்பாக இருக்கிறோமோ அவர்கள் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனத்துடன் இருப்போம். எனக்கு என்ன ஆனாலும் நான் தாங்கிக்குவேன் ஆனால் உனக்கு ஏதாவது ஆனால் மட்டும் என்னால் தாங்கவே முடியாதுனு பாசமழை பொழிவோம். இப்படி நாம் யார் மீது அன்பாக இருக்கிறோமோ அவர்கள் உடல் நிலை சரி இல்லை என்று சொல்லிவிட்டால் போதும் உடனே நாம் துடிதுடித்து அவர்களுக்கு மருந்தை தேடிப்பிடித்து சொல்வது உடன் அந்த வியாதி சீக்கிரம் குணமாக அவர் உடல் ரீதியாக மனரீதியாக இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று சொல்லுவோம். இவ்வளவு ஆர்வமாக நீங்கள் அவருக்கு எல்லாம் சொல்லும் போது உடனே அவர் அப்படியா மிக்க நன்றி நான் இப்போதிருந்தே தொடங்குகிறேன் என்று சொன்னால் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக அவர் நாளைக்கு பார்க்கலாம் என்று சொன்னால் நம் மனம் எப்படி துடித்து போகும் ? இந்த கேள்வியை நீங்கள் படிக்கும் போதே உங்கள் தலை வேகமாக அசைந்து ஆமாம் நன் சொன்னதை அவுங்க கேட்கல என்று உங்கள் அக்கறையை நீங்கள் காமிக்க முற்பட்டால்...

வெட்டிவேரின்  மருத்துவ பயன்கள் - 1

           கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும்.வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடும்,தாகம் தணியும்.    மேலும் அந்நீரை குடிப்பதால் காய்ச்சல், நீர் எரிச்சல்,நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறையும்.             மேலும் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.             தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.         காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரண...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்

 அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.  காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.  சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.  பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.  மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.  குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.  அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.  புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.  பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.  பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.  பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.  சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.  வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.  முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.  வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.  முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் ...