முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி

நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஆசைப் படுகிறோம். அது போல நாம் யார் மீது மிகவும் அன்பாக இருக்கிறோமோ அவர்கள் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனத்துடன் இருப்போம். எனக்கு என்ன ஆனாலும் நான் தாங்கிக்குவேன் ஆனால் உனக்கு ஏதாவது ஆனால் மட்டும் என்னால் தாங்கவே முடியாதுனு பாசமழை பொழிவோம். இப்படி நாம் யார் மீது அன்பாக இருக்கிறோமோ அவர்கள் உடல் நிலை சரி இல்லை என்று சொல்லிவிட்டால் போதும் உடனே நாம் துடிதுடித்து அவர்களுக்கு மருந்தை தேடிப்பிடித்து சொல்வது உடன் அந்த வியாதி சீக்கிரம் குணமாக அவர் உடல் ரீதியாக மனரீதியாக இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று சொல்லுவோம்.

இவ்வளவு ஆர்வமாக நீங்கள் அவருக்கு எல்லாம் சொல்லும் போது உடனே அவர் அப்படியா மிக்க நன்றி நான் இப்போதிருந்தே தொடங்குகிறேன் என்று சொன்னால் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக அவர் நாளைக்கு பார்க்கலாம் என்று சொன்னால் நம் மனம் எப்படி துடித்து போகும் ? இந்த கேள்வியை நீங்கள் படிக்கும் போதே உங்கள் தலை வேகமாக அசைந்து ஆமாம் நன் சொன்னதை அவுங்க கேட்கல என்று உங்கள் அக்கறையை நீங்கள் காமிக்க முற்பட்டால், ஒரு நிமிடம் நீங்கள் சிந்தியுங்கள் ! அடுத்தவர் உங்கள் அறிவுரையை கேட்கவில்லை என்று வருத்தப்படும் அதே நேரத்தில் நீங்கள் சோம்பேறித்தனம் பட்டு அப்புறம் பார்க்கலாம் என்று ஒதுக்கிவைத்ததை நினைவு கூர்ந்து இப்போது தலையை ஆட்டுங்கள் .

நீங்கள் ஒரு சிறந்த அறிவாளி தினமும் காலையில் வாக்கிங் போனால் நல்லது  என்பது யாரும் சொல்லாமல் உங்களுக்கே தெரியும் ஒரு நாள் காலை 5.30 மணிக்கு தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள் இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டேனா இப்படி அதிகாலை எழுந்து வாக்கிங் போவது மிகவும் நல்லது என்று நினைக்கிறீர்கள். ஆனால் உடனே எழுந்து நாடக்கீறிர்களா  என்றல் இல்லை நாளைக்கு பார்க்கலாம் நாளை காலை நேரத்தில் எழுந்தால்  பார்க்கலாம் என்று உடனே ஒரு சோம்பலில் ஒதுக்கி வைக்கிறோம். வழக்கத்திற்கு மாறாக நேரத்தில் எழுந்தும் கையில் நேரம் இருந்தும் நாளை பார்க்கலாம் என்னும் சோம்பேறித்தனம்( மன்னிக்கவும் சிலருக்கு நாளையை யே பார்க்கமுடியாமல் போகலாம்) நம் ஆரோக்கியத்தின் எதிரியாக இருக்கிறது.

இன்னும் சிலர் ஒரு செயலையோ அல்லது ஒரு மருந்தையோ இரண்டு நாட்கள் தொடர்ந்து முயன்று விட்டு மூன்றாவது நாளில் சோம்பேறித்தனத்தால் கை விடுவார் . தண்ணீரில் சீரகம் போட்டு கொதிக்கவைத்து குடித்தால் நல்லது, வெந்தயத்தை இரவல் ஊற வைத்து காலையில் குடித்தால் நல்லது என்பது, இதுபோன்ற விஷயங்களை ஓரிரு நாளில் நாம் கை  விட்டுவிடுவோம்.

இந்த சோம்பேறித்தனம் எங்கிருந்து வருகிறது நம் மனதில் இருந்துதான் காலை எழுந்து ஒரு வேலையை தொடங்க ஆரம்பிக்கும் முன்னே இந்த மனமானது உன்னால் இது முடியாது என்று நம்மை நமத்து வைக்க 10 காரணங்களை பட்டியலிடும் அனால் நம் உடல் என்றும் முடியாது என்று சொல்வதில்லை.என்னால இதுக்கு மேல நடக்க முடியாது ஒரு ஆட்டோ கிடைச்ச போய்டலாம் அப்படினு இருக்குற ஒரு சூழ்நிலையில டக்குனு ஒரு நாய் தொரத்துது அப்ப நாம ஒரு ஓட்டம் பிடிப்போம் பாருங்க நாம நடக்க முடியாதுனு நெனச்ச இடத்தை ஓடியே பிடிச்சிருவோம்.

மற்றவர்களுக்கோ அல்லது நமக்கோ ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்தால் சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து முயற்சி செய்தால்\
நாம் நீண்ட நாள் வாழலாம் என்பது தாழ்மையான கருத்து .

வாழ்க வளமுடன் !!!!! வாழ்க ஆரோக்கியத்துடன் !!!!!!

உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும் மேலும் தொடர்ந்து தகவல்களை பெற subscribe செய்யவும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...