முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும். வெட்டிவேரில் இருந்து நறுமண எண்ணையும்,மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த வெட்டி வேர் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாகின்றது. வெட்டி வேர் மருந்து பொருட்களிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும். கூந்தல் தைலம்,சோப்பு, வாசனை திரவியங்கள் போன்றவைகளும் வெட்டிவேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேரை தட்டி,வெட்டி வேர் விசிறி போன்றவைகளும் தயாரித்து பயன்படுத்தப்படுக...