மஞ்சள் ஒரு மாமருந்து மஞ்சள் ஒரு அற்புதானமான மருந்து பொருள் என்பது அறியாமலேயே நாம் தினமும் மஞ்சளை சமையலில் உபயோகித்து வருகிறோம். அதன் பயன்களை இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்தால் உணவே மருந்து எனும் உண்மையை `விளங்கி கொள்ள முடியும். எனக்கு தெரிந்த ஒரு சிலர் ஒரு வேளைக்கு 20 அல்லது 30 மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. முப்பது மாத்திரைகளை ஒருவர் சாப்பிடும் போது உணவு அருந்த அங்கே வயிற்றில் இடமேது.மேலும் மருந்தால் வரும் பக்க விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது . ஆனால் வீட்டுற்குள்ளேயே ஒரு எளிய உணவு பொருளான மஞ்சள் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற மருத்துக்களை உட்க்கொண்டு உடல் வீணாவதை தவிர்க்க முடிகிறது . மஞ்சளில் குர்குமின் எனும் ஒரு வேதி பொருள் உள்ளது அது பல்வேறு நோய்களை குணமாக்க உதவுகிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கபட்டு இருக்கிறது. மேலும் மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த கூட...