முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காபி மற்றும் டீ குடிப்பது நல்ல பழக்கமா ?

அவருக்கு பீடி, சிகரெட், பாக்கு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்ல அவருக்கு போய் இந்த வியாதி எப்படி வந்ததுன்னு தெரியல இப்படி யாராவது சொல்லி நம்ம பார்த்துருப்போம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமா  இருக்க என்ன என்ன நல்ல பழக்கம் இருக்குனு நாம பார்க்கிறதில்ல

1. சிலர் ரொம்ப நல்ல பழக்கம் வச்சிருப்பாங்க ஆனால் யாருக்காவது உதவி செய்யணும்னு முடிவெடுத்துட்டா சாப்பாடு , தூக்கம் மறந்து ஓடி ஓடி உழைப்பாங்க ...
2.இன்னும் சிலர் ஒரு காபி இல்லது டீ குடிச்சிட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க...
3.ஒரு சிலர் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல ஆனா காலைல எந்திரிச்சதும் வெறும் வயிற்றில் காபி குடிச்சாதான் எனக்கு நாளே போகும்னு சொல்லுவாங்க

இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க கூட இந்த காபிக்கு அடிமையாகி தேவை இல்லாத நேரத்தில் பருகி ஜீரண உறுப்பை கெடுப்பதுடன் நாளடைவில் சரியான நேரத்தில் பசி எடுக்காமல் சரியான முறையில் உண்ணாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்வதுடன் கெடுத்துக்கொள்கிறார்கள்.

உடலில் ஏற்படும் அமிலத்தன்மை கேன்சர் போன்ற கிருமிகள் விரைவாக பரவ வழி செய்கின்றன. உடலின் பித்தம் கூடி சமநிலை கெட்டு மேலும் பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.

காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி தவிர்த்து  இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து 45 நிமிடம் கழித்து எதையும் பருகி பாருங்கள்.

எந்த கெட்ட பழக்கம் இல்லை என்று சொல்லுமுன் சில நல்ல பழக்கங்களை வளர்த்து கொண்டால் நீண்ட நாள் இருக்கலாம்.

1. சுத்தம் பேணுதல்
2.நேரத்திற்கு உணவு அருந்துதல்
3.உடலுக்கு தேவையானவற்றை உண்ண கொடுத்தல்
4.எளிய உடற்பயிற்சி
5.காபி மற்றும் டீ அளவை குறைத்தல் மற்றும் அவசியத்தை குறைத்தல்
6.போதுமான ஒய்வு

பழக்கத்தை மாற்றுவோம் பல காலம் வாழ்ந்திருப்போம் ...வாழ்க வளமுடன்



   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...