முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த
இதுதான் உண்மையான சத்துமாவு


இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்..





#தேவையான_பொருட்கள்
-------------------------------
1.கேழ்வரகு 2 கிலோ
2.சம்பா கோதுமை 500 கிராம்
3.முழு பச்சை பயறு. 500 கிராம்
4.மக்காச்சோளம் 250 கிராம்
5.வெள்ளை சோளம் 250 கிராம்
6.கருப்புமுழு உளுந்து.100 கிராம்
7.துவரம்பருப்பு 50 கிராம்
8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100
9வெள்ளை கொ. கடலை.100 கிராம்
10.கொள்ளு. 50 கிராம்
11.கருப்பு எள்ளு. 50 கிராம்
12.வெள்ளை எள்ளு 50 கிராம்
13.ஜவ்வரிசி 100கிராம்
14.பார்லி அரிசி. 250 கிராம்
15. சாமை அரிசி. 100 கிராம்
16.மூங்கில் அரிசி. 100 கிராம்
17சிவப்பு அரிசி. 100 கிராம்
18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம் 19.கைக்குத்தல் அரிசி 100 கிராம்
20.கார் அரிசி. 100 கிராம்
21.கவுனி அரிசி. 100 கிராம்
22.வரகு. 250 கிராம்
23.பனி வரகு 250 கிராம்
24.குதிரைவாலி. 250 கிராம்
25.கம்பு. 250 கிராம்
26தினை. 250 கிராம்
27.சிறிய சோயா. 250 கிராம்
28.நிலக்கடலை. 250 கிராம்
29.பொட்டுகடலை. 250 கிராம்
30. பச்ச பட்டாணி 100 கிராம்
31.கரும் சீரகம் 100 கிராம்
32.வெள்ளரி விதை 50 கிராம்
33.பூசணிவிதை. 50 கிராம்
34. தர்பூசணி விதை. 50 கிராம்
35முருங்கை விதை 50 கிராம்
36.சாரப்பருப்பு. 50 கிராம்
37.முந்திரிப்பருப்பு 100 கிராம்
38.பாதாம்.  100 கிராம்
39.பிஸ்தா. 100 கிராம்
40.ஏலக்காய். 25 கிராம்
41. சுக்கு 25 கிராம்
42 ஓமம் 25 கிராம்
43 ஜாதிக்காய் 2
44 மாசிக்காய் 2
45 நாக கொட்டை 100 கிராம்
46புளியங்கொட்டை 50 கிராம்
47அமுக்கரா கிழங்கு 200 கிராம்
48கசகசா 10 கிராம்

#செய்முறை

கேழ்வரகு , சோளம், கம்பு, முழுபச்சபயறு, கொள்ளு, உளுந்து  ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் லேசான சூட்டில் பொன் நிறமாக வறுத்து எடுத்து கொண்டு
அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.மொத்தம்7கிலோ மாவு கிடைக்கும். இந்த சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. சில பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.
தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது.
மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

#பயன்கள்
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

#குறிப்பு:
#ஆறு_மாதம்_கெடாது
1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.

#சத்துமாவு, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...