முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா...!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா...!

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாய்யில் ஏற்படும் நாற்றம் அகலும், பசியை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் காலங்களில் ஏற்படும் முக்கிய பிரச்னைகள் தீர புதினாக்கீரை  உதவுகின்றது.

நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்கி அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு  அடிக்கடி தோன்றும் வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.

கடுமையான வயிற்றிப் போக்கின் போது இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும். தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகள் போன்றவற்றிற்கு புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் அவர்களின் தீராத வேதனை குறையும்.

புதினா சாரை முகத்தில் தடவி வர முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் நல்ல பலன் கிடைக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வரலாம்.

இந்த முறையில் புதினா சாறு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: புதினா இலைகள் - 1 கைப்பிடி, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,  சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினாவை கழுவிச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி,  வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...