முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கம்பு உடலுக்கு தரும் நன்மைகள்

கம்பு                 இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர். இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இந்த உஷ்ணத்தை கம்பு போக்குகிறது. மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து...

சிறு நீர், சிறு நீரகம் மற்றும் நீர் கடுப்பு பிரச்சனைகளுக்கு

நீர்கடுப்பு தீர அன்னாசி பழச்சாறு சாப்பிடவும் சிறுநீர் பாதை ரணம் தீர சந்தனக் கட்டையை பாலில் உரசி சாப்பிட்டு வரலாம் நீர் எரிச்சல் தீர கல்யாண முருங்கை இலைச்சாறு ஒரு  கரண்டி மோரில் கலந்து குடிக்கலாம் நீர்சுருக்கு சரியாக பனங்கற்கண்டு பசும்பால் சாப்பிட்டு வரலாம் சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம் சிறுநீரக வியாதி தீர சுரைக்காய் சாறு எலுமிச்சம்பழம் சாறு அருந்தலாம் நீரழிவு தீர நன்னாரி வேர் ஊறவைத்து வடிகட்டி குடிக்கலாம் சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் குணமாக அத்திபால் வெண்ணை கலந்து சாப்பிடவும் மிகையான சிறுநீர் கழித்தல் தீர மருதோன்றி இலை பத்து கிராம் பாலில் அரைத்து சாப்பிடவும்    சிறுநீரகம் பலமாக ரோஜாபூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் சாப்பிடவும்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த - வாழைப்பூ

வாழைப்பூவின் மருத்துவ குணம்      வாழைப்பூவைச் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர ...

மூளைப் பலம் பெற

மூளைகோளாறு குணமாக வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான பல பிணிகள் குணமாகும் மூளைப் பலம் பெற வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில் சாப்பிடவும் மூளைப் பலம் பெற பீர்கங்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வரலாம் மூளைச் சுறுப்பாக வல்லாரை சாறில் ஊற வைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடலாம்

கல்லடைப்பு நீங்க

கல்லடைப்பு நீங்க யானைநெருஞ்சி பொடி அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட குணமாகும் கல்லடைப்பு நீங்க மாவிலங்கபட்டை கசாயம் காலை மாலை சாப்பிடவும் கல்லடைப்பு நீங்க முதிர்ந்த மருதாணி வேர் பட்டை கசாயம் செய்து சாப்பிடவும்

பெருமாள் கோயில் தீர்த்தம் - பல்வேறு நோய்களுக்கான மருந்து

பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி புனித தீர்த்தம் நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து 1 – ஏலம், 2 – இலவங்கம், 3 – வால்மிளகு, 4 – ஜாதிப்பத்திரி, 5 – பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும். முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தை யும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பதனம் செய்து பூஜை அறையில் வைக்க லாம். இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து் ,. வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல்,...

வயிற்றுப் பூச்சி

வயிற்றுப் பூச்சிகளிடமிருந்து  விடுதலை பெற  வேப்பங்கொழுந்து ஈர்க்கு, கடுக்காய், பிரண்டை சாறு விட்டு அரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுக்க குடல் பூச்சி வெளியேறும். நாக்கு பூச்சி நீங்க குப்பை மேனி வேர் பொடி கஷாயம் செய்து குடிக்கலாம்.    குடற்பூச்சிகள் அகல கல்யாண முருங்கை இலைச் சாறு 10 துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு குடுக்கலாம்.   திமிர்பூச்சி அழிய சுண்டக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும். குடல் புழுக்கள் அழிய மாதுளம்பழம் சாப்பிடலாம்  வயிற்று பூச்சி அழிய வெங்காய பூவை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வரலாம். வயிற்று பூச்சிகள் ஒழிய தினமும் அன்னாசி பழம் சாப்பிட வேண்டும் . நுண் புழுக்கள் அழிய மணலிக்கீரையை உண்டு வரலாம்