முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உடலுக்கு சக்தி ஊட்ட தேவையான உணவுகள்

1) Lockdown காரணமாக, உங்கள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே சோர்வு எளிதில் அமைகிறது. கார்ப்ஸ் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உங்களுக்கு சக்தியைத் தருகிறது. ஆதாரங்கள் - கோதுமை, ஜோவர், பஜ்ரா 2) ஆன்டிபாடிகள் (உடலின் போராளிகள்) புரதத்தால் ஆனதால், புரதங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி பங்கைக் கொண்டுள்ளன. ஆதாரங்கள் - பருப்பு வகைகள், மெலிந்த இறைச்சி, முட்டை, பால். 3) நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு கொழுப்புகள் முக்கியம். ஆனால், கொட்டைகள், முட்டை, மெலிந்த இறைச்சி மற்றும் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் வடிவில் ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்வு செய்ய நினைவில் கொள்ளுங்கள் 4) வைட்டமின்கள் குறிப்பாக சி மற்றும் டி ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முதன்மையாக காரணமாகின்றன. வைட்டமின் சி என்பது எந்த சுவாச நோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது. மேலும், பெரும்பாலான மக்கள் lockdownல் சூரியனை வெளிப்படுத்தாததால், வைட்டமின் டி அளவு வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது, எனவே நீங்கள் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேட வேண்டும். ஆதாரங்கள் - க...

நிலக்கடலைப் பால் - Groundnut Milk - Healthy Milk

நிலக்கடலைப் பால் - Groundnut Milk - Healthy Milk  முளைத்த நல்ல நிலக்கடலை பருப்பு 300 கிராம்  நனையப் போட்ட முந்திரி பருப்பு 5, ஏலக்காய் 1 சேர்ந்து மிக்ஸியில் போட்டு பால் எடுக்கவும். பாலை சுடவைக்க கூடாது சூடான காபி,டீயில் சாப்பிடுவதற்கு முன் இந்த பாலை ஊற்றிக்கொள்ளலாம்    இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Healthy milk taken from Groundnut which is used to replace ordinary milk.It is more healthy and stronger.

எள் வேர்க்கடலை உருண்டை

எள் வேர்க்கடலை உருண்டை இளைத்தவனுக்கு எள் உணவாக கொடுக்கும் போது எடை கூடும்.‌ மேலும் பல சத்துக்கள் நிறைந்த எள்ளையும் வேர்கடலையும் வைத்து எளிதாக செய்யும் ஒரு உருண்டை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும். மேலும் சனிக்கிழமைகளில்  சனிக்கிரகத்தினால் ஏற்படும் பாதிப்பைகளை குறைக்க எள்ளினால் உணவை சனிக்கிழமை சேர்த்து கொள்வது நல்லது. தேவையானவை கறுப்பு எள் 1 கப் பச்சை வேர்க்கடலை 1 கப் வெல்லத்தூள் 2 கப் ஏலக்காய்த்தூள் சிறிதளவு செய்முறை கறுப்பு எள்ளை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவும். எள்ளைக் களைந்து, ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி,வெயிலில் உலரவிடவும்.லேசாக ஈரம் இருக்கும்போது வெறும் வாணலியில் சிறிதுசிறிதாக போட்டு வெடிக்கும்படி வறுக்கவும். ஆறிய பின் எள், வேர்க்கடலை, வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நார்ச்சத்து தாவர உணவிலிருந்தே கிடைக்கிறது. இது குடல் இயக்கங்களை சுலபமாக்குவதோடு ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. உணவு உண்ட நிறைவுத் தன்மை கொடுத்து உடல் எடையை குறைய உதவுகிறது. இதய நோய்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பை தவிர்க்கின்றது இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை கரையும் மற்றும் கரையா நார்ச்சத்து ஆகும். சைவ உணவில் இரண்டு வகை நார்ச்சத்துக்களும் உள்ளன. மாமிச உணவுகளான ஆட்டு இறைச்சி மீன் முட்டை மற்றும் பால் பொருட்களில் நார்ச்சத்து கிடையாது. கரையும் நார்ச்சத்து நீரில் கரைந்து களிம்பு போன்ற அமைப்பை உருவாக்கி செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. வயிறு காலியாவது தாமதமாவதால் வயிறு நிறைந்தது போன்ற உணர்வித்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. மலத்தை மிருதுவாக்கி மலம் எளிதில் வெளியேற உதவுவதால் நல்ல பாக்டீரியாக்கள் பெருகி, ஆரோக்கியமான பெருங்குடல் அமைய உதவுகிறது. வயிறு காலியாவது தாமதப் படுவதால் இன்சுலின் உணர்திறனில் சாதகமான விளைவை ஏற்படுத்தி ரத்த சர்க்கரையை கட்டுப்...

அரோமாதெரபி குளியல் உப்புகள்

ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த இந்த உப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சக்கரங்களை சமப்படுத்தவும் உட்செலுத்தப்பட்ட அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மூலம் உடலையும் மனதையும் தளர்த்தும். பாத் உப்புகள் கலந்த தண்ணீரில் மூழ்கி உங்கள் மன அழுத்தத்தை நீக்குங்கள். உங்கள் குளியல் நீரில் இந்த குளியல் உப்புகளைச் சேர்ப்பது மனதைத் தளர்த்தி, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது நச்சுத்தன்மையற்ற, பயமுறுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை, விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை.

வயிற்றுப்போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் வைத்து மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...