முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வெட்டி வேரின் மருத்துவ பயன்கள் -2

              முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.               வெட்டிவேரில் இருந்து நறுமண எண்ணையும்,மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.  இந்த வெட்டி வேர் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாகின்றது.                      வெட்டி வேர் மருந்து பொருட்களிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும். கூந்தல் தைலம்,சோப்பு, வாசனை திரவியங்கள் போன்றவைகளும் வெட்டிவேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.        கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேரை தட்டி,வெட்டி வேர் விசிறி போன்றவைகளும் தயாரித்து பயன்படுத்தப்படுக...

காபி மற்றும் டீ குடிப்பது நல்ல பழக்கமா ?

அவருக்கு பீடி, சிகரெட், பாக்கு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்ல அவருக்கு போய் இந்த வியாதி எப்படி வந்ததுன்னு தெரியல இப்படி யாராவது சொல்லி நம்ம பார்த்துருப்போம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமா  இருக்க என்ன என்ன நல்ல பழக்கம் இருக்குனு நாம பார்க்கிறதில்ல 1. சிலர் ரொம்ப நல்ல பழக்கம் வச்சிருப்பாங்க ஆனால் யாருக்காவது உதவி செய்யணும்னு முடிவெடுத்துட்டா சாப்பாடு , தூக்கம் மறந்து ஓடி ஓடி உழைப்பாங்க ... 2.இன்னும் சிலர் ஒரு காபி இல்லது டீ குடிச்சிட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க... 3.ஒரு சிலர் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல ஆனா காலைல எந்திரிச்சதும் வெறும் வயிற்றில் காபி குடிச்சாதான் எனக்கு நாளே போகும்னு சொல்லுவாங்க இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க கூட இந்த காபிக்கு அடிமையாகி தேவை இல்லாத நேரத்தில் பருகி ஜீரண உறுப்பை கெடுப்பதுடன் நாளடைவில் சரியான நேரத்தில் பசி எடுக்காமல் சரியான முறையில் உண்ணாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்வதுடன் கெடுத்துக்கொள்கிறார்கள். உடலில் ஏற்படும் அமிலத்தன்மை கேன்சர் போன்ற கி...

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி

சோம்பேறித்தனமே ஆரோக்கியத்தின் எதிரி நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஆசைப் படுகிறோம். அது போல நாம் யார் மீது மிகவும் அன்பாக இருக்கிறோமோ அவர்கள் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனத்துடன் இருப்போம். எனக்கு என்ன ஆனாலும் நான் தாங்கிக்குவேன் ஆனால் உனக்கு ஏதாவது ஆனால் மட்டும் என்னால் தாங்கவே முடியாதுனு பாசமழை பொழிவோம். இப்படி நாம் யார் மீது அன்பாக இருக்கிறோமோ அவர்கள் உடல் நிலை சரி இல்லை என்று சொல்லிவிட்டால் போதும் உடனே நாம் துடிதுடித்து அவர்களுக்கு மருந்தை தேடிப்பிடித்து சொல்வது உடன் அந்த வியாதி சீக்கிரம் குணமாக அவர் உடல் ரீதியாக மனரீதியாக இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று சொல்லுவோம். இவ்வளவு ஆர்வமாக நீங்கள் அவருக்கு எல்லாம் சொல்லும் போது உடனே அவர் அப்படியா மிக்க நன்றி நான் இப்போதிருந்தே தொடங்குகிறேன் என்று சொன்னால் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக அவர் நாளைக்கு பார்க்கலாம் என்று சொன்னால் நம் மனம் எப்படி துடித்து போகும் ? இந்த கேள்வியை நீங்கள் படிக்கும் போதே உங்கள் தலை வேகமாக அசைந்து ஆமாம் நன் சொன்னதை அவுங்க கேட்கல என்று உங்கள் அக்கறையை நீங்கள் காமிக்க முற்பட்டால்...

வெட்டிவேரின்  மருத்துவ பயன்கள் - 1

           கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும்.வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடும்,தாகம் தணியும்.    மேலும் அந்நீரை குடிப்பதால் காய்ச்சல், நீர் எரிச்சல்,நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறையும்.             மேலும் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.             தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.         காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரண...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்

 அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.  காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.  சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.  பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.  மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.  குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.  அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.  புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.  பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.  பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.  பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.  சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.  வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.  முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.  வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.  முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் ...

சீதாப்பழம்

மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும்பேன், பொடுகு தொல்லையில்இருந்து தலைமுடியை பாதுகாக்கும் குளிர்காய்ச்சல் நீங்கும் . இதயம் பலப்படும்

உருளைக்கிழங்கு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது