முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவம் கொண்ட கீரை வகைகள்

மருத்துவம் கொண்ட கீரை வகைகள்

கீரைகள் என்பது நம் தமிழர் உணவுகளில் மருந்தாக பயன்பட்டு வருகிறது. விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள் தான். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையை தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சியுறவும், நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகள் பெருமளவில் உதவுகிறது. ஆனால், இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இங்கு நம் உணவில் என்னென்ன கீரைகள் எடுத்துக்கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை - பசியைத்தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்;.

பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.

அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

கல்யாண முருங்கை கீரை - சளி, இருமலை குணப்படுத்தும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும்.

தூதுவளை - ஆண்மை தரும். சருமநோய், சளித்தொல்லை நீக்கும்.

மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும், மூலநோயைக் குணப்படுத்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...