முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காபி குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட

நமக்கு நன்றாகவே தெரியும் அதிகமாகக் காபி குடிப்பதால் ஏராளமான பக்க விளைவுகள் உண்டாகுமென்று. ஆனாலும் காபியை விட முடியவில்லை என்று புலம்புபவர்கள் ஏராளம்.
ஏனெனில் காபி குடிக்கும்போது, அதன் சுவை நம்முடைய நாவையும் மனதையும் விட்டு நீங்க நெடுநேரம் பிடிக்கும். ஆனால் சில உணவுப் பொருட்களை அதிகமாக நம்முடைய உணவோடு தினமும் சேர்த்துக் கொண்டால், காபி குடிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்துவிடுமாம்.

அப்படி காபி குடிக்கும் எண்ணத்தைக் குறைக்கச் செய்யும் உணவுகள் என்னென்ன?...
தயிர் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், காபி குடிக்கும் பழக்கம் குறைகிறதாம். அதோடு தயிர் ஜீரண சக்தியை சீராக்குகிறது.
நம்முடைய அன்றாட உணவில் முட்டையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், அடிக்கடி காபி குடிக்க வேண்டுமென்ற எண்ணம் குறையுமாம்.
தினமும் ஒரு கப் பாலில் அஸ்வகந்தா பொடியைக் கலந்து குடித்து வந்தால், காபி பருக வேண்டிய எண்ணமே இருக்காது என்று கூறப்படுகிறது.
மதிய உணவு வேளையில் ஒரு கைப்பிடியளவு பாதாம் அல்லது பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான முழு ஆற்றலும் கிடைக்கும். அதோடு காபி குடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாது.
உங்களுடைய காபி குடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டுமென்றால் அதற்கு பதிலாக, சிட்ரஸ் பழங்களுடைய ஜூஸை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் உடலில் நீர்த்தன்மை ஒருநாள் முழுக்க நிலைத்திருக்கும்.
பெப்பர்மிண்ட் டீயை தினமும் குடிப்பதால் உடல்சோர்வு தணிகிறது. மேலும் தலைவலியை குணப்படுத்துவதில் பெப்பர்மிண்ட் டீக்கு அதக பங்குண்டு.
இந்த உணவுகளையெல்லாம் தினமும் உங்கள் உணவோடு சேர்த்துக் கொணடால் காபி குடிக்கும் எண்ணம் அறவே இல்லாமல் போய்விடும்.
என்ன! இன்னைக்கே சாப்பிட ஆரம்பிச்சிடலாமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...