நமக்கு நன்றாகவே தெரியும் அதிகமாகக் காபி குடிப்பதால் ஏராளமான பக்க விளைவுகள் உண்டாகுமென்று. ஆனாலும் காபியை விட முடியவில்லை என்று புலம்புபவர்கள் ஏராளம்.
ஏனெனில் காபி குடிக்கும்போது, அதன் சுவை நம்முடைய நாவையும் மனதையும் விட்டு நீங்க நெடுநேரம் பிடிக்கும். ஆனால் சில உணவுப் பொருட்களை அதிகமாக நம்முடைய உணவோடு தினமும் சேர்த்துக் கொண்டால், காபி குடிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்துவிடுமாம்.
அப்படி காபி குடிக்கும் எண்ணத்தைக் குறைக்கச் செய்யும் உணவுகள் என்னென்ன?...
தயிர் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், காபி குடிக்கும் பழக்கம் குறைகிறதாம். அதோடு தயிர் ஜீரண சக்தியை சீராக்குகிறது.
நம்முடைய அன்றாட உணவில் முட்டையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், அடிக்கடி காபி குடிக்க வேண்டுமென்ற எண்ணம் குறையுமாம்.
தினமும் ஒரு கப் பாலில் அஸ்வகந்தா பொடியைக் கலந்து குடித்து வந்தால், காபி பருக வேண்டிய எண்ணமே இருக்காது என்று கூறப்படுகிறது.
மதிய உணவு வேளையில் ஒரு கைப்பிடியளவு பாதாம் அல்லது பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான முழு ஆற்றலும் கிடைக்கும். அதோடு காபி குடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாது.
உங்களுடைய காபி குடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டுமென்றால் அதற்கு பதிலாக, சிட்ரஸ் பழங்களுடைய ஜூஸை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் உடலில் நீர்த்தன்மை ஒருநாள் முழுக்க நிலைத்திருக்கும்.
பெப்பர்மிண்ட் டீயை தினமும் குடிப்பதால் உடல்சோர்வு தணிகிறது. மேலும் தலைவலியை குணப்படுத்துவதில் பெப்பர்மிண்ட் டீக்கு அதக பங்குண்டு.
இந்த உணவுகளையெல்லாம் தினமும் உங்கள் உணவோடு சேர்த்துக் கொணடால் காபி குடிக்கும் எண்ணம் அறவே இல்லாமல் போய்விடும்.
என்ன! இன்னைக்கே சாப்பிட ஆரம்பிச்சிடலாமா?
கருத்துகள்
கருத்துரையிடுக