முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பஞ்சபூத மருத்துவம்

*பஞ்சபூத மருத்துவம்* 1.நுரையீரல்>>>காற்று 2.கல்லீரல்>>>>>விண் 3.மண்ணீரல்>>>நிலம் 4.இருதயம்>>>> நெருப்பு 5.சிறுநீரகம்>>>நீர் இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும் 1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல் 2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை 3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை   4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்  5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர் ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும். 1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு கண். 2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு வாய். 3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு மூக்கு.  4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உருப்பு நாக்கு. 5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு காது. 1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும். 2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும். 3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு க...
சமீபத்திய இடுகைகள்

ஆடிக்கூழ்

ஆடிக்கூழ் ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். நாளை ஆடிப்பிறப்பு.  #ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼  லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை:  அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக  தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க  விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். ப...

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...

தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்

 தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம் திங்கட்கிழமை*:  வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமை  கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். புதன்கிழமை தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமை சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும். வெள்ளிக்கிழமை  வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும். சனிக்கிழமை:  முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உட...

முருங்கைக் கீரை பொடி செய்வது எப்படி....

முருங்கைக் கீரை பொடி செய்வது எப்படி.... தேவையான பொருட்கள்:::   5 கப் முருங்கை கீரை 200 கிராம் கருப்பு உளுந்து 50 கிராம் கடலைப் பருப்பு 2 டேபிள்ஸ்பூன் மல்லி 2 டேபிள்ஸ்பூன் சீரகம் 1 டேபிள் ஸ்பூன் மிளகு 8 _12 வரமிளகாய் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பு 50 கிராம் காய்ந்த பூண்டு 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் செய்முறை :::: முருங்கை கீரையை சுத்தம் செய்து அலசி துணியில் பரப்பி நிழலில் உலரவிடவும் பின் வெறும் வாணலியில் மணம் வர வறுத்து எடுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் பின் வெறும் வாணலியில் உளுந்து கடலைப்பருப்பு மல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக வறுத்து எடுக்கவும் பின் உப்பு புளி பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும் பின் அதனுடன் ஏற்கெனவே பொடி செய்து வைத்துள்ள முருங்கை இலையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் இதை சூடான சாதத்தில் இரண்டு கரண்டி பொடியை தூவி சூடான நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கலந்து கத்தரிக்காய் உருளைக்கிழங்கு வாழைக்காய் சேனைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தா செமயா இருக்கு...

பொட்டு கடலை லட்டு

பொட்டுக்கடலை லட்டு செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் : பொருள் - அளவு பொட்டுக்கடலை200 கிராம் சர்க்கரை 100 கிராம் முந்திரிப் பருப்பு10 நெய்தேவைக்கேற்ப மிதமான வெந்நீர் தேவைக்கேற்ப செய்முறை :   பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.   இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.   பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.   எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.    சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.  

முடக்கத்தான் கீரை தோசை - ஆரோக்கிய சமையல்

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி .... செய்ய தேவையான பொருட்கள் தோசை மாவு – இரண்டு கப் முடக்கத்தான் கீரை – இரண்டு கப் சின்ன வெங்காயம் – 10 முதல் 15 வெள்ளை பூண்டு – 10 முதல் 15 சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் உறித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அந்த நேரத்தில் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். சீரகம் நன்கு வதங்கி வாசனை வரும் நேரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கீரை நன்கு எண்ணெயில் வதங்க வேண்டும். பச்சை வாசனை செல்லும் வரை கீரையை வதக்கிக் கொண்டால் தோசை சுவையாக இருக்கும். கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விடலாம். இப்போது வதக்கி வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்யாக அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.   அந்த கலவையை நாம் தோசை மாவில் கலந்து தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இப்பொழுத...