முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறிவேப்பிலை

*🍃 கறிவேப்பிலை 🍃*

🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.

*🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

*♻ இதில் இருப்பவை :-*

வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே  பட்டியலிடப்பட்டுள்ளன.

*🍃 கொழுப்புக்கள் கரையும் :*

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

*🍃 இரத்த சோகை :*

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

*🍃 சர்க்கரை நோய் :*

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

*🍃 இதய நோய் :*

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

*🍃 செரிமானம் :*

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

*🍃 சளித் தேக்கம் :*

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

*🍃 கல்லீரல் பாதிப்பு :*

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

*🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*

🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

👫 👬 👭 👯 குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

பகிர்வோம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...